ஹாரிபாட்டர் எழுத்தாளர் ரவுலிங்கிற்கு கொலை மிரட்டல்| Dinamalar

லண்டன்: பிரபல எழுத்தாளர் ஜே.கே. ரவுலிங்கிற்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், சல்மான் ருஷ்டி கலந்து கொண்ட போது மர்ம நபர், சல்மான் ருஷ்டியை கத்தியால் சரமாரியாக குத்தினார். அவருடைய கழுத்து மற்றும் வயிற்றில் கத்தியால் குத்தப்பட்டுள்ளதால் அபாய கட்டத்தில் உள்ளதாகவும், பார்வை பறிபோக வாய்ப்புள்ளதாகவும் டாக்டர்கள் கூறியுள்ளனர்.


இந்நிலையில் பிரபல இங்கிலாந்தை சேர்ந்த பெண் எழுத்தாளர் ஜே.கே.ரவுலிங். இவர் ஹாரிபாட்டர் என்ற கதாபாத்திரத்தை முதன்மையாக கொண்டவை. உலகம் முழுதும் விற்பனையில் முன்னிலை பெற்றன. இவருக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ”ருஷ்டியை அடுத்து நீங்கள் ” என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதையடுத்து போலீசாரின் உதவியை நாடியுள்ளார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.