எடப்பாடிக்கு செமயா 2 சான்ஸ்; தவற விட்டால் தனிக்கட்சி தான்!

தமிழ்நாட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுகவில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்தது. எடப்பாடி ஒருபுறம், ஓபிஎஸ் மறுபுறம் திரும்பி நின்றதால் கட்சியில் பிளவு ஏற்பட்டது.

இதையடுத்து பாஜக தலையிட்டு

மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரை சமாதானப்படுத்தி அடுத்து வந்த தேர்தல்களில், கூட்டணிக்காக பயன்படுத்திக்கொண்டது.

இதையடுத்து கட்சி ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி ஆகியோர், அதிமுகவை வழி நடத்தும் நிலைக்கு வந்தது.

ஒரே நேரத்தில் சாதனை படைத்த சகோதரிகள்!

இந்த சூழலில் இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பனிப்போரில் ஈடுபட்டு வந்ததாக சொல்லப்பட்டது. இதை பயன்படுத்தி ஓ.பன்னீர்செல்வத்துக்கு அல்வா கொடுக்க எடப்பாடி பழனிச்சாமி முடிவு செய்தார்.

இதன் தொடர்ச்சியாக, அதிமுகவின் பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் முன்னணி நிர்வாகிகள் பலரை தன்னுடன் சேர்த்துக் கொண்டு கட்சியின் பொதுக்குழு கூட்டத்தை கடந்த ஜூலை மாதம் 11ம் தேதி நடத்தினார்.

இந்த கூட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி அறிவிக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக அலுவலகத்தை சூறையாடியதாக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியை விட்டு எடப்பாடி பழனிச்சாமி நீக்கினார்.

இதற்கு பதிலடியாக எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவித்துவிட்டு ஓபிஎஸ் அதிமுகவுக்கு உரிமை கோரி சட்டப்போராட்டத்தை முன்னெடுத்தார்.

இதில், ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தல் நடைமுறைக்கு பொதுக்குழு ஒப்புதல் வழங்காததால் பதவி காலாவதி ஆகிவிட்டதாகவும், 2432 பொதுக்குழு உறுப்பினர்கள் ஒற்றை தலைமையை விரும்புவதாக கடிதம் வழங்கி இருப்பதாகவும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் வாதிடப்பட்டது.

அதே சமயம், ஜூன் 23ம் தேதி ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தலுக்கு ஒப்புதல் அளிக்கா விட்டால் பதவி காலாவதி ஆகிவிடும் என, எந்த தீர்மானத்திலும் இல்லை என ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வாதிடப்பட்டது. மேலும், பொதுக்குழு உறுப்பினர்கள் தொண்டர்களின் விருப்பமாகவும் கருதி விட முடியாது எனவும் கூறி இருந்தது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பை ஒத்தி வைத்திருந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கினார். அதில் ஜூலை 11ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லாது.

மேலும் கட்சியின் விதிப்படி பொதுச்செயலாளர், ஒருங்கிணைப்பாளர் அல்லது இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் இணைந்து தான் பொதுக்குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுக்க முடியும்.

அவைத்தலைவர் அழைப்பு விடுக்க முடியாது. அவர், பொதுக்குழு கூட்டத்தைத் தான் நடத்த முடியும். ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை ரத்து செய்து நிறைவேற்றிய தீர்மானம் ரத்து செய்யப்படுகிறது.

அதே போல் ஜூன் 23ம் தேதிக்கு முன் கட்சியில் என்ன நிலை இருந்ததோ, அதே நிலை தான் தற்போது நீடிக்க வேண்டும் என நீதிபதியின் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இதன் மூலம், எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லாது என, அறிவிக்கப்பட்டுள்ளதால் அவருடைய ஆதரவாளர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு நீதிமன்ற தீர்ப்பு மூலம் பின்னடைவு ஏற்பட்டு இருந்தாலும், அவருக்கு இருக்கும் சூப்பரான 2 வாய்ப்புகள் குறித்து அரசியல் நோக்கர்கள் சுட்டிக்காட்டி இருப்பது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.

அதாவது, உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்களை ஏற்றுக் கொண்டு ஓபிஎஸ் அனுமதியுடன் பொதுக்குழுவை கூட்டி எடப்பாடி பழனிச்சாமி தனக்கு உள்ள செல்வாக்கை பயன்படுத்தினால் தீர்மானத்துக்கு மீண்டும் உயிர் கொடுக்க முடியும்.

ஒருவேளை பொதுக்குழுவை கூட்டுவதற்கு ஓ.பன்னீர்செல்வம் ஒத்துழைப்பு வழங்க மறுக்கும்பட்சத்தில் உயர்நீதிமன்றத்தை மீண்டும் நாடி அவருக்கு சாதகமாக தீர்வு பெற்றுக்கொள்ள முடியும்.

மற்றொன்று உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி மேல்முறையீடு செய்து கடந்த ஜூலை மாதம் 11ம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டமும், அதில் நிறைவேற்றிய தீர்மானங்களும் செல்லும் என்ற தீர்ப்ப்பை பெற முடியும்.

இந்த இரண்டு வாய்ப்புகளும் கண் முன்பாக உள்ள நிலையில் இதில், எடப்பாடி பழனிச்சாமி எந்த வாய்ப்பை பயன்படுத்தி அதிமுகவை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவார்? என்ற கேள்வி அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பலமாக எழுந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.