ஜாமீன் மனுவை விரைந்து விசாரிக்கக் கோரி கணியாமூர் பள்ளித் தாளாளர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்

மாணவி மரண வழக்கில் ஜாமீன் மனுவை விசாரித்து முடிவெடுக்க விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்துக்கு உத்தரவிடக் கோரிக் கணியாமூர் பள்ளித் தாளாளர் ரவிக்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

மாணவியின் தந்தை தொடுத்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதைக் காரணம் காட்டி, வழக்கை நடத்துவதில் காவல்துறை தாமதப்படுத்துவதாகவும், காவல்துறை கூறுவதை ஏற்று ஜாமீன் மனு மீதான விசாரணையை விழுப்புரம் நீதிமன்றம் தள்ளிவைத்து வருவதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், மாணவியின் தந்தை தொடுத்த வழக்கில் காவல்துறை ஆகஸ்டு 29ஆம் நாள் அறிக்கை தாக்கல் செய்வதைப் பொறுத்து ரவிக்குமார் மனு மீது முடிவெடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.