மக்கள் அச்சம் சந்தேகம் இன்றி வாழ்வதற்கான உரிமையை பாதுகாப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாக வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
‘தேசிய பாதுகாப்பு சட்டம் மற்றும் ஊடக அறிக்கையிடல்’ என்ற தலைப்பில் இன்று (19) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன, இனம், சமயம், உள்ளிட்ட காரணங்களை அடிப்படையாகக் கொண்டு எவருக்கும் அநீதி இழைக்கப்படக்கூடாது. நாட்டிலுள்ள சகல பிரஜைகளுக்குமான உரிமைகள் அரசியலமைப்பின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதாயின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அவசியம் என இந்த மாநாட்டில் பங்கேற்ற பாதுகாப்பு செயலாளர் ஜென்ரல் கமல் குணரட்ன கூறினார்.