டேராடூனில் மேகவெடிப்பு… உறைய வைத்த அதிகாலை; அவசரமாய் ஓடிய மக்கள்!

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் அடுத்த சார்கெட் கிராமத்தில் இன்று அதிகாலை 2.45 மணியளவில் திடீரென மேகவெடிப்பு நிகழ்வு ஏற்பட்டுள்ளது. இதனால் தொடர் மழை வெளுத்து வாங்கி கொண்டிருக்கிறது. ஏற்கனவே நல்ல மழை பெய்து கொண்டிருக்கையில் மேகவெடிப்பு நிகழ்வு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. விடாமல் கொட்டித் தீர்த்து வரும் மழையால் நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

மேகவெடிப்பு குறித்து தகவல் கிடைத்ததும் மாநில பேரிடர் மீட்பு படையினர் சம்பந்தப்பட்ட கிராமத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். சார்கெட் கிராமத்தில் சிக்கிக் கொண்ட நபர்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைய செய்து வருகின்றனர்.

குறிப்பாக டேராடூனில் உள்ள புகழ்பெற்ற தப்கேஸ்வர் மகாதேவ் கோயிலை ஒட்டி பாயும் தமாஷா நதியில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. மேலும் மாதா வைஷ்ணோ தேவி குகை யோகோ கோயில் மற்றும் தப்கேஷ்வர் மகாதேவ் ஆகியவற்றின் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்த குளமும் சேதமடைந்திருக்கிறது. அதிர்ஷ்டவசமாக எந்தவொரு உயிர் சேதமும் ஏற்படவில்லை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.