வெட்க சிரிப்புடன் ரம்யா பாண்டியனின் புதிய போட்டோ வைரல்

ஓவர்நைட்டில் டிரெண்ட் ஆகி சமூக வலைத்தளங்களில் வைரலாக பேசப்பட்ட பிரபலங்களில் ஒருவர் தான் நடிகை ரம்யா பாண்டியன். ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் ரம்யா பாண்டியன் மிகவும் பரிச்சயம் ஆன முகம். நடிகை ரம்யா பாண்டியன் ஜோக்கர் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இந்த படம் தேசிய விருது வாங்கிய திரைப்படமாகும். அதேபோல் மொட்டை மாடியில், குஷி ஜோதிகா பாணியில் ஒரு கவர்ச்சியான போட்டோ ஷூட் மூலம் ஒரே நாளில் பிரபலமானார் ரம்யா பாண்டியன்.

பின்னர் விஜய் டிவியின் மிகப்பெரிய ஹிட் ஷோக்களில் ஒன்றான குக் வித் கோமாளி சீசன் ஒன்றில் போட்டியாளராக கலந்து கொண்டு ஃபைனலிஸ்ட்டுகளில் ஒருவராக வந்தார். பின்னர் பிக்பாஸ் சீசன் நான்கில் போட்டியாளராக கலந்து கொண்டு அதிலும் ஃபைனலிஸ்ட்டுகளில் ஒருவராக வந்தார். பிக்பாஸ் சீசன் 4 இவருக்கு ரசிகர்களை அதிகப்படுத்தியது. அதற்கு பிறகு ஓரிரு திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இடையே விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு என்ற நகைச்சுவை ரியாலிட்டி ஷோவின் நடுவராகவும் பங்கேற்றிருந்தார்.

இதற்கிடையில் நடிகை ரம்யா பாண்டியன் இன்ஸ்டாகிராமில் பிரபலம் என்பதும் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரண்டரை மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர். இவர் வெளியிடும் புகைப்படங்கள் வீடியோக்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகும். 

அந்த வகையில் தமிழ் திரையுலகின் நடிகையும் பிக் பாஸ் போட்டியாளருமான ரம்யா பாண்டியன் தற்போது பாவாடை தாவணியில் வெட்கச் சிரிப்புடன் கூடிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெகுவாக வைரலாகி வருகின்றன. மேலும் இந்த புகைப்படத்தின் கேப்ஷனாக அவர் தனுஷ், சமந்தா நடித்த ’தங்கமகன்’ படத்தில் இடம்பெற்ற பாடல் வரிகளை பதிவு செய்துள்ளார். அதன்படி அதில், 

என்ன சொல்ல, ஏது சொல்ல,
கண்ணோடு கண் பேச வார்த்தயில்ல!
என்னென்னவோ உள்ளுக்குள்ள,
வெல்ல சொல்லாம, என் வெட்கம் தள்ள!

என்று பதிவிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.