அதிக குடியால் தொழிலாளி சாவு | Dinamalar

புதுச்சேரி : கோரிமேடு பகுதியில் அதிக குடி போதையில் மயங்கி விழுந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.கோரிமேடு, காமராஜர் நகரை சேர்ந்தவர் ஜெபஸ்டின்,48; பெயிண்டர். குடி பழக்கத்தில் இருந்த இவர், பணிக்கு செல்லாமல் இருந்தார். நேற்று முன்தினம் இரவு 7.00 மணிக்கு, இவர் அளவிற்கு அதிகமாக குடித்து விட்டு, வீட்டில் மயங்கி விழுந்தார்.அவரது குடும்பத்தார் அவரை மீட்டு, கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதித்து அவர் இறந்ததை உறுதி செய்தார். ஜெபஸ்டின் மனைவி வேல்விழி அளித்த புகாரின் பேரில், டி.நகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.