ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் 2 தீவிரவாதகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள சோப்பூரில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு பொமாய் பகுதியில் வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பதுங்கி இருந்த தீவிரவாதிகள் திடீரென வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். பதிலுக்கு வீரர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். துப்பாக்கி சூட்டின்போது பொதுமக்கள் ஒருவரும் காயமடைந்தார். கொல்லப்பட்ட தீவிரவாதிகள் ஜெய்ஷ் முகமது தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.