மே 09 பாராளுமன்ற உறுப்பினர் வீட்டிற்கு தீ: 03 பேர் கைது

மே 09 ஆம் திகதி அன்று ஏற்பட்ட போராட்டத்தின் போது ஹோகந்தரவில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் இல்லத்தை சேதப்படுத்தி தீ வைத்த குற்றச்சாட்டில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள், மாலபே பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹோகந்தரவில் அமைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினரின் வீட்டிற்கு சொத்துக்களை சேதப்படுத்தி தீ வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர்களை மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளினால் நேற்று ஹோகந்தர பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த சந்தேக நபர்கள் 18, 36 மற்றும் 38 வயதுடைய ஹோகந்தர பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.