பிரிட்டன் ராணி இறுதிசடங்கு செலவு எவ்வளவு தெரியுமா..? – பிரிட்டன் பொருளாதாரத்தில் ஏற்படப்போகும் மாற்றங்கள்..!

பிரிட்டன் மகாராணி எலிசபெத் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். பிரிட்டன் மகாராணி ஸ்கார்ட்லாந்தில் உள்ள பால்மாரல் அரண்மனையில் தங்கி இருந்தபோது திடீர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார் .தொடர் சிகிச்சை அவருக்கு அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். 96 வயது வரை வாழ்ந்த எலிசபெத் தனது வாழ்நாளில் 70 ஆண்டுகாலம் ராணி பட்டம் பெற்று ஆட்சி நடத்தியுள்ளார்.

இந்த நிலையில் நிர்வாக ரீதியான சில மாற்றங்களும் பிரிட்டனில் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக ராணி எலிசபெத்தின் இறுதி சடங்குக்காக மட்டும் சுமார் 6 பில்லியன் பவுண்டுகள் செலவாகும் என எதிர்பார்கப்படுகிறது. அதவாது இந்திய ரூபாய் மதிப்பில் 55 ஆயிரம் கோடி ருபாய் என்று கணக்கிடப்படுள்ளது.

1952 ஆண்டு பதவி ஏற்றது முதல் ராணி எலிசபெத் பல்வேறு காரணங்களுகாக புகழ்பெற்றவராக விளங்குகிறார். அவர் பெயரும் உலகம் முழுவதும் புகழ் பெற்றதாக விளங்குகிறது. தற்பொழுது உள்ள பிரிட்டன் நாட்டு பணத்தாள்களில் ராணி எலிசபெத்தின் படங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த பணத்தாள்கள் படிப்படியாக மாற்றப்பட்டு அதில் புதிதாக பதவி ஏற்றுள்ள பிரிட்டன் பிரதமர் சார்லஸ் படம் இடம் பெற உள்ளது. இதற்காக 10 பில்லியன் பவுண்டுகளுக்கு மேல் செலவாகும் என எதிர்பார்கப்படுகிறது. இது இந்திய மதிப்பில் சுமார் 1 லட்சம் கோடி என்கின்றனர்.

ஆனால் இது முழுமையாக மாற்றம் பெற்ற பல ஆண்டுகள் ஆகலாம் என்று கூறுகின்றனர். அதே போல் பிரிட்டன் பாஸ்போர்ட்டிலும் அவரது பெயருக்கு பதிலாக புதிய மன்னர் சார்லஸ் பெயர் இடம் பெரும் என்கின்றனர். இந்த மாற்றங்கள் இங்கிலாந்து பொருளாதாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்கின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.