போலி கடவுச்சீட்டு மூலம் நாட்டை விட்டு வெளியேற முயற்சித்த இருவர் கைது


போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி நாட்டை விட்டு வெளியேற முயற்சித்த ஈரான் மற்றும் சோமாலிய பிரஜைகள் இருவர் குடிவரவு குடியகல்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இருவரும் பிரான்ஸ் மற்றும் தென்னாபிரிக்காவிற்கு செல்ல முயற்சித்த போது பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து குடிவரவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போலி கடவுச்சீட்டு

போலி கடவுச்சீட்டு மூலம் நாட்டை விட்டு வெளியேற முயற்சித்த இருவர் கைது | National Arrested At Bia Over Fake Passports Sl

அவர்களது கடவுச்சீட்டுகள் போலியானவை என சந்தேகத்தின் பேரில் குடிவரவு அதிகாரிகள் சோதனையிட்டதையடுத்து சந்தேக நபர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர்.

மேலும், சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 

May you like this Video




Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.