ஏ ரி எம் இயந்திரம்: பணம் எடுக்கும் போது ….

தன்னியக்க டெலர் இயந்திர (ATM) அறைக்கருகாமையில் இருந்து பல நபர்களை ஏமாற்றி அவர்களின் ATM ஏரிஎம் அட்டையை தந்திரமாக திருடி , ஐம்பது இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பணத்தை திருடிய நபரை கடுவலைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த சந்தேக நபரை கைது செய்த போது பலரின் எட்டு வங்கிகளின் ஏரிஎம் அட்டைகளையும் பொலிஸார் கைப்பற்றினர்.

சந்தேக நபர் கடுவலைப் பகுதியிலுள்ள அரச வங்கியொன்றிற்கு அருகிலிருந்து சுமார் 40 தடவைகளில் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி இருபது இலட்சம் ரூபாவை மோசடி செய்து பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஏ ரி எம் அறைக்கருகாமையில் நின்று கொண்டிருந்தவாறே  ,கையடக்கத் தொலைபேசியைப் பயன்படுத்தி கதைத்துக் கொண்டிருப்பது போல் பாசாங்கு செய்து ,இவ்வாறு மோசடி செய்து பணத்தை பெற்றிருப்பதாக பொலிஸார் குறிப்பிட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.