ரஷ்ய அதிபரை கொலை செய்ய முயற்சி..! – தீவிர விசாரணை தொடக்கம்..!

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் கொலை முயற்சியிலிருந்து தப்பி உள்ளார்.ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினை கொலை செய்ய முயற்சிசெய்து அவர் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது பாதுகாப்பு படையினரால் உயிர் தப்பினார் என்று ரஷ்ய செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினைக் கொலை செய்ய ஏற்கெனவே 5 முறை முயற்சி நடந்ததாக அவரே கடந்த 2017ம் ஆண்டு தெரிவித்திருந்தார். 6வது முறையாகத் தற்போது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்பது குறிபிடத்தக்கது.
இந்நிலையில், அதிபர் விளாதிமிர் புதின் தனது அதிகாரபூர்வ இல்லத்துக்கு தனது காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது, முன்னால் சென்ற பாதுகாப்பு வாகனத்துக்கு குறுக்கே ஆம்புலன்ஸ் வந்து நின்றது. ஆனால், 2வது பாதுகாப்பு வாகனம் அதை மீறிச் சென்றது. அப்போது, விளாதிமிர் புதினின் கார் முன்பக்க இடது சக்கரத்தில் தாக்குதல் நடத்தப்பட்டு பெரிய சத்தம் எழும்பியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து காரில் இருந்து புகை கிளம்பியது. உடனடியாக பாதுகாவலர்கள் அதிபர் புதினின் காரை பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு சென்றனர். இந்தத் தாக்குதல் முயற்சியில் விளாதிமிர் எந்தவிதமான ஆபத்தின்றி தப்பினார் என யூரோ வீக்லி தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்தைத்த தொடர்ந்து அதிபர் விளாதிமிர் புதினுக்கு பாதுகாப்பு அளித்த பாதுகாவலர்கள் உள்ளட்டோர் பணியில் கவனக்குறைவாக இருந்தமைக்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

அதிபர் புதின் எங்கு செல்கிறார், எப்போது புறப்படுவார் என்ற திட்டம் அனைத்தும் அவரின் பாதுகாவலர்களுக்கு மட்டும் தான் தெரியும். இந்நிலையில் புதின் வருகையை கணித்து தாக்குதல் நடத்தியது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
ரஷ்ய அதிபர் புதின் கொலை முயற்சிக்கு உள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.