பெண் பத்திரிகையாளருக்கு மிரட்டல் பிரபல கேரள நடிகர் மீது போலீஸ் வழக்கு பதிவு

திருவனந்தபுரம்: மலையாள யூடியூப் சேனலை சேர்ந்த பெண் பத்திரிகையாளரை ஆபாசமாக பேசி மிரட்டிய குற்றச்சாட்டில், பிரபல மலையாள இளம் நடிகர் ஸ்ரீநாத் பாசி மீது கேரள போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மலையாள சினிமாவில் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவர் ஸ்ரீநாத் பாசி. இவர் முதன் முதலாக நாயகனாக நடித்த சட்டம்பி என்ற படம் நேற்று வெளியானது. இவர்  ஒரு மலையாள யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்தார். அந்த சேனலை சேர்ந்த பெண் பத்திரிகையாளர் பேட்டி எடுத்தார். அப்போது, அந்த பெண் பத்திரிகையாளர் கேட்ட ஒரு கேள்வி பாசிக்கு பிடிக்கவில்லை. உடனடியாக கேமராவை ஆப் செய்யும்படி கூறிய அவர், பெண் பத்திரிகையாளரை ஆபாசமாக திட்டி, மிரட்டியதாக கூறப்படுகிறது. இது பற்றி அந்த பெண், போலீசில் புகார் செய்தார். அதன் பேரில், பாசி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.