பங்களாதேஷில் படகு விபத்து – 24 பேர் உயிரிழப்பு

பங்களாதேஷ் பஞ்சகரா மாவட்டத்தில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

நேற்று (25) பகல் கரடோயா ஆற்றில் சென்று கொண்டிருந்த படகு திடீரென கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்தவர்களில் 24 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

போடா, பஞ்ச்பீர், மரியா மற்றும் பங்கரி பகுதிகளைச் சேர்ந்த இந்து சமூகத்தைச் சேர்ந்தவர்கள் துர்கா பூஜை விழாவில் பங்கேற்க ஆலியா காட்டில் இருந்து பாதேஷ்வர் கோவிலை நோக்கி பிரார்த்தனை செய்ய சென்று கொண்டிருந்த போது அவுலியார் காட் பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

அதிக பாரம் ஏற்றிச்சென்றதால் படகு கவிழ்ந்ததாக கூறப்படுகிறது. மேலும் 30க்கும் அதிகமானோர் காணாமல் போயிருப்பதாகவும்  அவர்களை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.