ஆர்எஸ்எஸ் பேரணி நவம்பர் 6ந்தேதிக்கு மாற்றம்! உயர் நீதிமன்றம்

சென்னை: அக்டோபர் 2ந்தேதி நடைபெற அனுமதி வழங்கிய சென்னை உயர்நீதி மன்றம், ஆர்எஸ்எஸ் பேரணியை நவம்பர் 6ந்தேதி நடத்த அனுமதி வழங்கி உள்ளது.

தமிழ்நாட்டில் சில சம்பவங்களால் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறி, காவல்துறை, அக்டோபர் 2ந்தேதி நடைபெற இருந்த  ஆர்எஸ்எஸ் பேரணிக்கு தடை விதித்தது. இதை எதிர்த்து ஆர்எஸ்எஸ் தரப்பில் முறையீடு செய்யப்பட்ட நிலையில், காவல்துறை தரப்பிலும், மறுஆய்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுமீதான விசாரணை இன்று நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிமன்றம்,  அக்.2-ம் தேதிக்கு பதிலாக அக்டோபர் 6ந்தேதி ஆர்எஸ்எ1 பேரணி நடத்த காவல்துறைக்கு உத்தரவிட்டு  நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மேலும், அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் பேரணி நடத்த ஆர்எஸ்எஸ்-க்கு காவல்துறை அனுமதி கொடுக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.