மாணவியருக்கு தொல்லைஆசிரியருக்கு அடி, உதை| Dinamalar

தாவணகரே : தொடக்க பள்ளி மாணவியருக்கு, பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் ஒருவரை, மாணவியரின் பெற்றோர், அடித்து துவைத்து, போலீசாரிடம் ஒப்படைத்தனர்.தாவணகரே, சென்னகிரியின், யரகட்டிஹள்ளி கிராமத்தில் உள்ள, அரசு தொடக்க பள்ளியில், ஆசிரியராக பணியாற்றுபவர் லோகேஷ், 45. இவர் மாணவியருக்கு, பாலியல் தொல்லை கொடுத்தார். ஆசிரியரின் செயலால், வெறுப்படைந்த மாணவியர், தங்கள் பெற்றோரிடம் கூறினர்.கொதிப்படைந்த பெற்றோர், கிராமத்தினருடன், நேற்று முன் தினம் பள்ளிக்கு வந்து, ஆசிரியர் லோகேஷை பிடித்து, அடித்து துவைத்தனர். சென்னகிரி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.