ஊட்டி தாவரவியல் பூங்காவில் பல வண்ண மலர்களை கொண்டு பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு அலங்காரம்..!

ஊட்டி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் பல வண்ண மலர்களை கொண்டு பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. சுற்றுலா நகரமான ஊட்டியில் இரண்டாவது சீசன் களை கட்டி உள்ளது. ஊட்டி வரும் சுற்றுலா பயணிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஊட்டி தாவரவியல் பூங்காவில் தொட்டிகளில் நடவு செய்யப்பட்டு பூத்துக் குலுங்கும் பலவண்ண மலர்களைக் கொண்டு ‘பிளாஸ்டிக் தவிர்ப்போம், மறுசுழற்சி செய்வோம்; தமிழக அரசின் மீண்டும் மஞ்சப்பை” என்று அலங்காரம் செய்யப்பட்டுள்ளது இது சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.