வெனிசுலா நாட்டில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 56 பேர் காணாமல் போயுள்ளனர்.
வெனிசுலா நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், சான்டோஸ் மிச்செலினா நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் லாஸ் தெஜேரியாஸ் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அரகுவா என்ற மத்திய மாகாணத்தின் வடக்கே கனமழையால் நேற்று (09) நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் பலர் சிக்குண்டுள்ளனர்.
அவர்களில் 22 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 50 பேர் காணாமல் போயுள்ளனர்.
இதனால் நாட்டுத் தலைவர் நிகோலஸ் மதுரோ, அவசர கால நிலையை பிறப்பித்து சம்பவ பகுதிக்கு சென்று மீட்பு பணிகளை மேற்கொள்ளும் படி உத்தரவிட்டுள்ளார்.