200க்கும் மேற்பட்டோர் தலைமறைவு

அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தின் போது அரச சொத்துக்களை சேதப்படுத்தியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டின் பேரில் பொலிஸாரால் தேடப்பட்டு வரும் 404 சந்தேக நபர்களின் புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியிடப்பட்ட போதிலும், இதுவரையும் அவர்களில் 200க்கும் குறைவானவர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், குறித்த குற்றச்சாட்டுடன் தொடர்புடைய சந்தேக நபர்களின் புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, ஒரு குழுவினர் வீடுகளை விட்டு வெளியேறி தலைமறைவாகியுள்ளனர்.

குறிப்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வீடு எரிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் குழுவொன்றே இவ்வாறு தலைமறைவாகியுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.