புனர்வாழ்வு பணியகம் தொடர்பான சட்டமூலம் அரசியல் யாப்புக்கு முரண்பட்டது.
இதனால் பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மை மற்றும் சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தீர்மானித்திருப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அவ்வாறு இல்லாத பட்சத்தில் அரசியல் யாப்பு அமைவாக சரத்துக்களில் திருத்தங்களை மேற்கொண்டு நிறைவேற்றப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் இதுதொடர்பிலான தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளதாக சபாநாயகர் சபை நடவடிக்கைகள் நேற்று (20) ஆரம்பிக்கப்பட்ட போதே அறிவித்தார்.