தெற்கு அந்தமான் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று நாளை மறுதினம் 23ம் திகதி மேற்கு வங்க கடல் பகுதியில் (சிட்ரங்) புயலாக வலுவடைய உள்ளது என சென்னை வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.
இதனால் ,பொது மக்கள் அவதானமாக இருக்குமாறு சென்னை வானிலை ஆய்வு நிலையம் அறிவுறுத்தியுள்ளது.
இது கடல் மட்டத்தில் இருந்து 7.6 கி.மீ தூரம் வரை பரந்து விரிந்திருக்கிறது. வங்கக்கடலில் தென் கிழக்கு மற்றும் கிழக்கு மத்திய பகுதியில் உருவாகி உள்ள இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, வடக்கு மற்றும் வட மேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகிறது.
இதேவேளை ,தமிழக கடலோர பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இந்தியாவிலுள்ள 23 மாவட்டங்களில் இன்றும், கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை நிலையம் தெரிவித்துள்ளது.