திருமணமான 2 மாதங்களில் மாயமான கணவர்! இலங்கை தமிழ்ப்பெண் அளித்த புகார்



தமிழகத்தில் கணவர் மாயமானதாக இலங்கை பெண் பொலிசில் புகார்.

வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தும் காவல்துறை.

தமிழகத்தில் திருமணமான 2 மாதங்களில் கணவரை காணவில்லை என இலங்கை தமிழ்ப்பெண் புகார் கொடுத்துள்ளார்.

சின்னசேலம் அடுத்த குரால் கிராமத்தை சேர்ந்த முருகேசன் மகன் சதிஷ்குமார் (25).
இவர் ஊதுபத்தி தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அவருக்கும் இலங்கை தமிழர்கள் முகாமில் வசிக்கும் நடேசபிள்ளை என்பவரின் மகள் சுலக்‌ஷனா (21) என்பவருக்கும் காதல் ஏற்பட்டது.

இதையடுத்து கடந்த ஜூலை 20ம் திகதி மேல்மருவத்துார் கோவிலில் இருவருக்கும் திருமணம் நடந்தது.

இந்த நிலையில் கடந்த 20ஆம் திகதி சதீஷ்குமார் வீட்டில் இருந்து வெளியே சென்ற நிலையில் பின்னர் வீடு திரும்பவில்லை.

இது குறித்து அவரின் மனைவி சுலக்‌ஷனா சமீபத்தில் பொலிசில் புகார் அளித்தார்.
புகாரை பெற்றுக் கொண்ட பொலிசார் வழக்குப்பதிவு செய்து சதீஷ்குமாரை தேடி வருகிறார்கள். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.