அமித் ஷா மகனுக்கு ஒரு சட்டம் பொன்முடி மகனுக்கு ஒரு சட்டமா.? திமுகவை கிழித்த மாஜி அமைச்சர்

விழுப்புரம் மாவட்டம் வானூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் அதிமுக 51 வது பொன்விழாவை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் கொடியேற்றி இனிப்பு வழங்கினார் விழாவின் முடிவில் செய்தியாளரை சந்தித்த முன்னாள் அமைச்சர் சண்முகம் பேசியதாவது: செயல்படாத அரசு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத மக்கள் விரோத ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது தமிழ்நாட்டில் பால் விலை ஒரே நாளில் 12 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது இதனால் 40% அளவிற்கு பால் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. மக்களை பற்றி சிந்திக்காமல் தானும் தான் குடும்பமும் வாழ வேண்டும் என்று இந்த பொம்மை முதல்வர் கனவு உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றார்.

மேலும், அமித்ஷா மகனுக்கு இந்திய கிரிக்கெட் வாரியத்தில் தலைவர் பதவியை கொடுத்த போது

எதிர்ப்பு தெரிவித்து பேசிய இதே வாய் இன்றைக்கு பொன்முடி மகனுக்கு தமிழ்நாடு கிரிக்கெட் வாரியத்தில் பதவி கொடுத்தது பற்றி கேட்டால் அது வேற வாய் இது நாற வாய் என்பார். அப்படிப்பட்ட கூட்டம் திமுக கூட்டம் என காட்டமாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், கோவை குண்டுவெடிப்பை பற்றி முதல்வர் இன்று வரை வாய் திறக்கவில்லை தீவிரவாதத்தை கண்டிக்காத ஒரே முதல்வர் ஸ்டாலின் அப்படி என்றால் குண்டுவெடிப்பை சரி என்கிறாரா அல்லது அதன் பின்னணியில் இவர்கள் யாரேனும் இருக்கிறார்களா என்று சந்தேகம் எழுகிறது. அரசு செயல்படாமல் இருப்பதை ஆளுநர் சுட்டிக்காட்டி வருகிறார். அதுவே அவரது கடமை உடனடியாக ஆளுநரை மாற்ற வேண்டும் என்று அவரை மிரட்டி பார்க்கிறார்கள் இந்த அரசு தன்னுடைய கையால் ஆகாத தனத்தை வெளிப்படையாக காட்டி வருகிறது என்றார்.

தொடர்ந்து திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் விழுப்புரம் மாவட்டத்தில் என்ன பணி நடைபெற்று உள்ளது? முதல்வர் வீட்டில் கைகட்டி வேலை செய்வதற்கு அமைச்சர்கள் இருக்கிறார்கள். விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அமைச்சர்கள் வீட்டில் அடியாள் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்றார். பேட்டியின் போது சட்டமன்ற உறுப்பினர்கள் சக்கரபாணி மற்றும் அர்ச்சுனன் உடன் இருந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.