குரங்கம்மை அல்லது மங்கிபொக்ஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்ட நோயாளர் குணமடைந்து வருவதாக தொற்று நோயியல் பிரிவின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் ஆனந்த விஜய விக்ரம தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கையில் அடையாளங்காணப்பட்ட முதலாவது குரங்கம்மை நோயாளர் குறித்து சுகாதார பிரிவு தெரிவிக்கையில் ,குரங்கம்மை நோய் குறித்து பொது மக்கள் தேவையற்ற பீதியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என்று தெரிவித்துள்ளது.
ஐரோப்பா மற்றும் ஏனைய நாடுகளில் கடந்த மே மாதம் தொடக்கம் இந்த நோய் பரவிய போதிலும் தற்பொழுது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. தெற்காசிய நாடுகளில் இதுவரை 23 நோயாளர்களே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.