#BREAKING:- நாளை 11 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை… எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா ?

தமிழ்நாட்டில் கடந்த மாதம் 29-ம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் நேற்று முன்தினம் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. இது தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை கடலோரப் பகுதிகளையொட்டி நிலவுகிறது.

இது தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக தமிழ்நாடு, புதுச்சேரி கடற்கரையை நோக்கி நாளைக்குள் (நவ.12) நகர்ந்து வரக்கூடும் என்றும், இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இன்று (நவ. 11) முதல் நாளை மறுதினம் (நவ.13) வரை பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.நாளை 9 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை… எந்தெந்தெ மாவட்டங்கள் தெரியுமா ?

இந்நிலையில், கனமழை காரணமாக சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கடலூர்,காஞ்சிபுரம், நீலகிரி,விழுப்புரம்,அரியலூர்,திருவாரூர்,செங்கல்பட்டு, மயிலாடுதுறை,வேலூர் மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.