மூணாறு அருகே நிலச்சரிவு சுற்றுலா பயணி மாயம்| Dinamalar

மூணாறு,
கேரள மாநிலம் மூணாறு அருகே பலத்த மழையால் நேற்று ஏற்பட்ட நிலச்சரிவில் காட்டாற்று வெள்ளம் உருவாகி சாலைகளில் பாய்ந்தது. இதில் சிக்கி சுற்றுலா வேன் அடித்துச் செல்லப்பட்டு ஒருவர் மாயமானார்.

கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மலையோர பகுதிகளில் நேற்று கன மழை பெய்தது.

மூணாறு அருகே குண்டளை, எல்லப்பட்டி, டாப் ஸ்டேஷன், வட்டவடை பகுதிகளில் மழை கொட்டியது. இதில் குண்டளை எஸ்டேட் புதுக்கடி அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் காட்டாற்று வெள்ளம் உருவாகி, கற்கள் மற்றும் சகதியுடன் சாலையில் பாய்ந்தது.

இதில், டாப் ஸ்டேஷன் சென்று விட்டு மூணாறை நோக்கி திரும்பிய கோழிக்கோடு சுற்றுலா பயணியரின் வேன் சிக்கியது.

வேனில் இருந்த குழந்தைகள் உட்பட, 11 பேர் கீழே இறங்கினர். ரூபேஷ், 40, என்பவர் தன் மொபைல் போனை எடுக்க வேனில் ஏறினார். அப்போது காட்டாற்று வெள்ளம் அதிகரித்து, வேனை பள்ளத்தில் அடித்துச் சென்றது.

டிரைவர் தப்பிய நிலையில் ரூபேஷ் மாயமானார். அவரை தேடும் பணியில் மூணாறு தீயணைப்பு துறையினர், போலீசார், பொதுமக்கள் ஈடுபட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.