ரஷ்ய அச்சுறுத்தலை தொடர்ந்து இங்கிலாந்தின் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் சுமார் 4.9 பில்லியன் மதிப்பில் கட்டப்படவுள்ள 5 போர்க்கப்பல்கள்..!

ரஷ்யாவின் அச்சுறுத்தலை தொடர்ந்து, இங்கிலாந்தின் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில், சுமார் 4.9 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் 5 போர் கப்பல்களை உருவாக்கவுள்ளதாக அந்நாட்டின் பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஷ்யாவின் தொடர் அச்சுறுத்தலால், இங்கிலாந்து மற்றும் நட்பு நாடுகளை பாதுகாக்க, அடுத்த தலைமுறை போர்க்கப்பல்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.

ஏற்கனவே 3 போர்க்கப்பல்கள் கட்டப்பட்டு வரும் நிலையில், வரும் 2030-ம் ஆண்டு மத்தியில் மொத்தமாக 8 போர் கப்பல்களின் கட்டுமான பணியும் முடிவடையும் என ரிஷி சுனக் குறிப்பிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.