மாஸ்கோ: உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணை வீசிய சம்பவத்தில் அந்த ஏவுகணை போலாந்து நாட்டை தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் கடந்த பிப்ரவரி மாதம் போரை தொடங்கி கடந்த 9 மாதங்களாக நடத்தி வருகிறது. இதில் கெர்சன், மரியுபோல் உள்ளிட்ட நகரங்களை ரஷிய படைகள் கைப்பற்றின. கெர்சன் நகரை மீட்டு உக்ரைன் படை கடுமையாக சண்டையிட்டு வந்தன.
இந்தநிலையில் நேற்று ரஷ்ய ஏவுகணைகள் போலந்து மீது தாக்குதல் நடத்தியதாகவும், இதில் இரண்டு பேர் கொல்லப்பட்டதாக அமெரிக்க உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த ஏவுகணைகள் கிழக்கு போலந்தில் உக்ரைனின் எல்லைக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தை தாக்கியது.
இது தொடர்பாக போலந்து பிரதமர், தேசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அரசு குழு அவசரக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாக அரசு டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement