திருவள்ளூர்: தொழிற்சாலை மேற்கூரைலிருந்து தவறி விழுந்த வெளிமாநில தொழிலாளி பலி.!

திருவள்ளூர் மாவட்டத்தில் தொழிற்சாலை மேற்கூறையில் இருந்து தவறி விழுந்த வெளிமாநில தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் உளுந்தை கிராமத்தில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் உத்தரபிரதேச மாநிலம் செல்தான்பூர் பகுதியை சேர்ந்த சந்தோஷ் குமார் (21) என்பவர் தங்கி லிப்ட் ஆப்பரேட்டராக வேலை செய்து வந்தார். 

இந்நிலையில் நேற்று முன்தினம் சந்தோஷ் குமார் தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருந்தபோது தொழிற்சாலையின் உரிமையாளர் பாலாஜி, பழுதடைந்த மேற்கூரையை சரி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதனால் சந்தோஷ்குமார் மேற்க்கூரையின் மீது ஏறி பழுதை சரி செய்து கொண்டிருக்கும் போது திடீரென நிலைத்தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவரை உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து மப்பேடு போலீசார், தொழிற்சாலை உரிமையாளரான பாலாஜிமீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.