அரசு பேருந்து மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட 30 பேர் காயம்..!

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே அரசு பேருந்து மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட 30 பேர் காயம் அடைந்தனர்.

மஞ்சவாடியில் இருந்து அரூர் நோக்கி சென்ற அரசு பேருந்தில்  காளிப்பேட்டை அரசு பள்ளி மாணவ, மாணவிகள் உள்ளிட்ட திரளான பயணிகள் பயணம் செய்தனர்.

சேலம் -அரூர் நெடுஞ்சாலையில்  தண்ணீர்தொட்டி பேருந்து நிறுத்தத்தில் நின்ற போது சேலத்தில் இருந்து அரூர் நோக்கி அதிவேகமாக சென்ற தனியார் பேருந்து, அரசு பேருந்தின் பின்பகுதியில் பயங்கரமாக மோதியது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.