தம்மாத்துண்டு செடி பாஜக.. கிழி கிழினு கிழித்த சீமான்.. அண்ணாமலை அப்செட்

செய்தியார்களை சந்தித்த

சவுக்கு சங்கர் ஜாமீன் மற்றும் பாஜகவை குறித்த கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். குறிப்பாக தமிழகத்தில் பாஜக மூன்றாவது கட்சியாக உயர்ந்துள்ளதாக அக்கட்சி கருதுகிறதாக கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சீமான், பாஜக அப்படி சொல்லிக்க வேண்டியதுதான். அப்படி பெருமை பேசும் பாஜக வரும் 2024 தேர்தலில்

அல்லது அதிமுகவின் முதுகு பின்னாடி நின்று போட்டியிடப்போகிறது.

நீங்கள் ஏன் வளரும் கட்சி என்று சொல்கிறீர்கள். என்னை பொறுத்தவரையில் பாஜக எனது மரத்தின் நிழலில் வளரும் குட்டை செடி, அவ்வளவுதான். உலக தலைவர் மோடி என்று பெருமை பேசும் பாஜக தமிழகத்தில் தனித்து போட்டியிட வக்கில்லை. வரும் தேர்தலில் மோடியின் பெருமை பற்றி பேசி பாஜக தமிழகத்தில் போட்டியிடட்டும், காங்கிரஸ் ராஜிவ் காந்தியை பற்றி பேசி போட்டியிடட்டும், நாங்களும் பிரபாகரனை பற்றி பேசி போட்டியிடுகிறோம்.

யாருக்கு வாக்கு விழுகிறது என்று பாப்போம்” என சீமான் பாஜகவுக்கும், காங்கிரசுக்கும் சவால் விடுத்துள்ளார். இதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சீமானின் சவாலை ஏற்பாரா அல்லது கூட்டணி இல்லாமல் எங்களால் போட்டியிட முடியாது என்பதை நேர்மையாக கூறுவாரா என்ற கேள்வி எழுகிறது.

தொடர்ந்து சவுக்கு சங்கரை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த சீமான், ஜாமீனில் வந்துள்ள சவுக்கு சங்கரை நேரில் சென்று சந்திக்கவுள்ளேன். கட்சி வேலைகள் இருப்பதால் அதை முடித்துக்கொண்டு உறுதியாக அவரை சந்திப்பேன் என்று சீமான் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.