முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானிக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன

மும்பை,

இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானிக்கு கடந்த 2018- ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. ஆனந்த் பிரமல் என்ற தொழில் அதிபரை இஷா அம்பானி கரம் பிடித்தார். இந்த தம்பதிக்கு மகன் – மகள் என இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன.மகனுக்கு ஆதியா மற்றும் கிருஷ்னா என பெயர் சூட்டியிருப்பதாக அம்பானி குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அம்பானி குடும்பத்தினர் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், எங்கள் மகள் இஷா- ஆனந்த் தம்பதிக்கு இன்று இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. ஆதியா என்ற பெண் குழந்தையும் கிருஷ்ணா என்ற மகனும் பிறந்து இருக்கிறான். தாயும் சேயும் நலமாக இருக்கிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தாத்தா ஆகியிருக்கும் முகேஷ் அம்பானி மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.