17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது.!

கோவை மாவட்டத்தில் 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபரை போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் குப்பம்பாளையம் பகுதியை சேர்ந்த 21 வயது வாலிபருக்கும், அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமிக்கும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

இதையறிந்த சிறுமியின் பெற்றோர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் கடந்த ஆண்டு சிறுமியை வாலிபர் திருமணம் செய்து கொண்டார். ஆனால் சிறுமிக்கு தற்பொழுது 17 வயதான நிலையில் அவர் கர்ப்பமானார். இந்நிலையில் சிறுமியை பரிசோதனை செய்வதற்காக வாலிபர் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அப்பொழுது சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர், 17 வயதில் சிறுமி 4 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மருத்துவர் இதுகுறித்து அன்னூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தி சிறுமையை கர்ப்பமாக்கிய வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.