திப்ரூகார்: அசாமில் ராகிங் தொல்லையால், விடுதி கட்டடத்தின் 2-வது மாடியில் இருந்து மாணவர் ஒருவர் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்த சம்வவம் திப்ரூகார் பல்கலைக்கழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அசாமின் திப்ரூகார் மாவட்டத்தில் உள்ள திப்ரூகார் பல்கலைக்கழகத்தில் உள்ள விடுதியில் தங்கி மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பல்கலையில் ராகிங் தொல்லை மாணவர்களுக்கிடையே நடந்து வந்தது.
இந்த நிலையில், விடுதியின் 2-வது மாடியில் தங்கியிருந்த மாணவர் ஒருவர் கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை தொடர்ந்து அவரை அருகே இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
தற்கொலைக்கு முயன்ற ஆனந்த் சர்மா என்ற மாணவரின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். இது தொடர்பாக, 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து, திப்ரூகார் மாவட்ட எஸ்.பி. கூறுகையில், விடுதி கட்டடத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற மாணவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. குற்றவாளி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement