உங்களுக்கு தேவையில்லாத அழைப்புகள் வருகிறதா..? இதை தடுக்க களத்தில் குதித்த டிராய்..!!

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) தொல்லை தரும் தேவையற்ற தொலைபேசி அழைப்புகள் மற்றும் செய்திகளைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகளை எடுக்க உள்ளது. ஸ்பேம் செய்திகள் மற்றும் பதிவு செய்யப்படாத டெலிமார்க்கெட்டர்களிடமிருந்து வரும் அழைப்புகள் பற்றிய பரவலான புகார்களுக்கு மத்தியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவு (AI), இயந்திர கற்றல் தொழில்நுட்பம் மற்றும் ஸ்பேம் கண்டறிதல் அமைப்பு ஆகியவற்றின் உதவியுடன், பதிவு செய்யப்படாத டெலிமார்க்கெட்டர்களிடமிருந்து தேவையற்ற அழைப்புகள் மற்றும் செய்திகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். டிராய், ரிசர்வ் வங்கி, செபி (SEBI) மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சகம் ஆகியவை நிதி மோசடிக்கு வழிவகுப்பதால், தேவையற்ற அழைப்புகள் மற்றும் செய்திகளைக் கட்டுப்படுத்த ஒரு கூட்டு செயல் திட்டத்தை கொண்டு வர முடிவு செய்துள்ளன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.