நண்பர்களுடன் வீடு திரும்பிய இளைஞர்… திடீரென வந்த தும்மல்; பறிபோன உயிர்

மீரட்,

உத்தர பிரதேசத்தின் மீரட் நகரில் இரவில், இளைஞர் ஒருவர் தனது நண்பர்களுடன் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டு இருந்துள்ளார். வழியில் அவருக்கு தும்மல் வந்துள்ளது.

இதனால், நடந்தபடியே, தும்மல் போட்ட அவர் சிறிது நேரத்திற்கு பின், நண்பரின் தோளில் கைபோட்டபடி சோர்வாக நடந்து சென்றுள்ளார்.

எனினும், சற்று நேரத்தில் திடீரென சரிந்து, தெருவிலேயே அவர் விழுந்துள்ளார். இதனால், பயந்து போன அவரது நண்பர்கள் உடனடியாக அவரை தூக்க முயற்சித்து உள்ளனர்.

ஆனால், அவர் எழுந்திருக்கவில்லை. இதனை தொடர்ந்து, அவர்கள் உதவி கேட்டு அலறியுள்ளனர். அந்த பகுதியில் வசித்தவர்கள் மற்றும் அந்த வழியே நடந்து சென்றவர்கள் உதவியுடன் அந்த இளைஞரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

எனினும், அதில் பலனின்றி அவர் உயிரிழந்து விட்டார் என மருத்துவர் தெரிவித்து உள்ளனர். கித்வாய்நகர் காலி பகுதியை சேர்ந்த அவரது பெயர் ஜுபைர் (வயது 18) என தெரிய வந்துள்ளது. தும்மலை தொடர்ந்து, மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து இருக்கலாம் என கூறப்படுகிறது.

நண்பர்களுடன் நடந்து சென்ற 18 வயது இளைஞர் ஒருவர், இரவில் திடீரென தும்மல் வந்ததில், சரிந்து விழுந்து உயிரிழந்தது அந்த பகுதியில் உள்ளவர்கள் இடையே பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.