ஜி-20 ஆலோசனை கூட்டம்: டெல்லி செல்லும் ஸ்டாலின், இபிஎஸ்!

இந்தியா தலைமை ஏற்றுள்ள ஜி-20 மாநாட்டை சிறப்பாக நடத்துவதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மாலை டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் பல்வேறு கட்சித் தலைவர்கள் பங்கு பெறும் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு முதலமைச்சர்

, எதிர்கட்சித் தலைவர்

ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர்.

ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. அடுத்த ஆண்டு ஜி-20 மாநாடு இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்காக மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்காக அனைத்துக் கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டத்துக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. மத்திய அரசு 32 பிரிவுகளில் நாடு முழுவதும் சுமார் 200 கூட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளது. எல்லா மாநிலங்களிலும் இந்த கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன.

தமிழகத்தில் சென்னையில் ஜி-20 கூட்டம் நடைபெறும் என்று தெரிய வந்துள்ளது. இதற்கிடையே, தலைநகர் டெல்லியில் இன்று இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பெரும்பாலான கட்சி தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜி-20 ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பேன் என்று மேற்கு வங்காள முதல்-மந்திரி முதல் நபராக அறிவித்தார். இந்நிலையில், ஜி-20 ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி செல்கிறார். ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று விட்டு இரவே அவர் சென்னை திரும்ப உள்ளார்.

அதேபோல் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் என்ற அடிப்படையில் எடப்பாடி பழனிசாமிக்கு நாடாளுமன்ற விவகாரத்துறையிலிருந்து அழைப்பு வந்துள்ளது.

இன்று ஜெயலலிதாவின் நினைவு நாள் அனுசரிக்கப்படுவதை ஒட்டி அவரது நினைவிடத்தில் எடப்பாடி பழனிச்சாமி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார்.

பின்னர் டெல்லிக்கு புறப்பட்டு இன்று மாலை பிரதமர் தலைமையில் நடைபெற உள்ள ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளார். மாநாட்டுக்கு பிறகு பிரதமர் மோடியை அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனியாக சந்தித்து பேசுவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.