மலேசியாவில் நிலச்சரிவு : 16 பேர் உயிரிழப்பு

மலேசியாவில் இன்று (16) அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் 16 பேர் உயிரிழந்த நிலையில், நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மலேசிய தலைநகர் கோலாலம்பூர் அருகே பதங்கலி என்ற நகரில் தனியார் வேளாண்மை பண்ணை அருகே பலர் தங்கிருந்துள்ளனர்.

இந்நிலையில், இந்த வேளாண்மை பண்ணையில் இன்று (16) அதிகாலை திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் 79 பேர் சிக்கிக் கொண்டுள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக் குழுவினர் நிலச்சரிவில் சிக்கிய 26 பேரை உயிருடன் மீட்டுள்ளனர். ஆனால், இந்த நிலச்சரிவில் 16  பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் நிலச்சரிவில் 51 பேர் மண்ணுக்குள் புதைந்துள்ளதால் அவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 50க்கும் மேற்பட்டோர் மண்ணுக்குள் புதைந்துள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.