தெலுங்கானாவில், தடுப்புச்சுவரில் மோதிய கார் தீப்பிடித்து எரிந்த விபத்தில் இருவர் உயிரிழந்தனர். 2 பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தெலுங்கானா மாநிலம் நல்கொண்டாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் காரில் பயணம் செய்துகொண்டிருந்தனர். அப்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் எதிர்பாராத விதமாக சாலையின் நடுவில் உள்ள தடுப்புச்சுவரில் மோதியது. இதில் கார் தலைகீழாக கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்தது.
இந்த விபத்தில் டிரைவர் உட்பட இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் இருவர் பலத்த காயமடைந்தனர். உயிரிழந்தவர்கள் டிரைவர் பானி குமார், அவருடைய தாயார் கருணா எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பானி குமாரின் மனைவி கிருஷ்ணவேணி, மகன் சாய் சனிஷ் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். அவர்களது 10 வயது மகள் ஜஸ்ரிதாவுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. நக்ரேக்கல் நுழைவு வாயிலில் உள்ள புறவழிச்சாலையில் ஏற்பட்ட இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.