மூக்கு வழியே செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்துக்கு ஒன்றிய அரசு ஒப்புதல்

டெல்லி: மூக்கு வழியே செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்துக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பூஸ்டராக பயன்படுத்தப்பட உள்ள புதிய தடுப்பு மருந்து இன்று முதல் கொரோனா தடுப்பு திட்டத்தில் சேர்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மூக்குவழியே செலுத்தப்படும் கொரோனா பூஸ்டர் தடுப்பு மருந்து முதற்கட்டமாக தனியார் மருத்துவமனைகளில் வழங்கப்பட உள்ளது.  

நமது நாட்டில் சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு, பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் மூக்கு வழியே கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் மூக்கு வழியே செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்து ஒன்றை மும்பை கிளென்மார்க் நிறுவனம், கனடாவின் சனோடைஸ் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கியது. மூக்கு வழியேயான இந்த மருந்தை 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் பயன்படுத்தலாம்.

இதை இந்தியாவில் தயாரித்து விற்பனை செய்ய இந்திய பொதுமருந்து கட்டுப்பாட்டு மற்றும் முறைப்படுத்துதல் ஜெனரல் அனுமதி வழங்கி இருந்தது. தற்போது பாரத் பயோடெக் நிறுவனமும் மூக்கு வழியே செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்தை தயாரித்துள்ளது. இந்த மருந்தை அவசரகாலத்துக்கு பயன்படுத்திக் கொள்ள இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி கொடுத்தது. இந்நிலையில், மூக்கு வழியே செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்துக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்து, பூஸ்டராக பயன்படுத்தப்பட உள்ள புதிய தடுப்பு மருந்து இன்று முதல் கொரோனா தடுப்பு திட்டத்தில் சேர்க்க அனுமதி வழங்கியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.