கரூர்: ரஃபேல் வாட்ச் பில்லை வெளியிடாத பாஜக தலைவர் அண்ணாமலையை விமர்சித்து கரூரில், ”தம்பி மல, பில்லு இன்னும் வரல” என திமுகவைச் சேர்ந்தவர்கள் கிண்டலடித்து போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
கரூர் திருமாநிலையூரைச் சேர்ந்தவர் டி.எம்.செல்வேந்திரன். திமுகவைச் சேர்ந்த இவர், பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த செப்டம்பரில் வெளியானப்போது மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜியை பொன்னியின் செல்வனாக சித்தரித்து பதாகை வைத்திருந்தார்.
தற்போது, அமைச்சர் செந்தில்பாலாஜி, ரஃபேல் வாட்ச் பில்லை வெளியிடுமாறு பாஜக தலைவர் அண்ணாமலையை வலியுறுத்தி வரும் நிலையில், இன்று (டிச. 25) முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், செந்தில்பாலாஜி ஆகியோரின் படங்களுடன், ”தம்பி மல! பில்லு இன்னும் வரல..?” என விமரிசித்து போஸ்டர் ஒட்டியுள்ளார். இது திமுகவினரிடம் வரவேற்பையும், பாஜகவினரிடம் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.