கடலூர்: கடலூர் மாவட்டம் புவனகிரி சேத்தியாத்தோப்பு சுற்றுவட்டார பகுதிகளில் அரசு உத்தரவை மீறி அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில், சிறப்பு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. அரையாண்டு தேர்வு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது என்ற உத்தரவு மீறி நடந்து இருக்கிறது.
சிதம்பரம் அடுத்த சேத்தியாத்தோப்பு அனைத்து தனியார் பள்ளிகளிலும் அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் இருக்க கூடாது என அரசு உத்தரவை மீறி செயல்படும் சேத்தியாத்தோப்பு அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கடலூர் மாவட்டம் புவனகிரி உள்ளிட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளுக்கும் அரையாண்டு தேர்வு முடிந்த நிலையில், தற்போது விடுமுறை அளிக்கப்பட்டு, விடுமுறை நாட்களில் அரசு பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் எடுக்க கூடாது என்று அரசு உத்தரவு அளித்து இருந்த நிலையில் தொடர்ந்து புவனகிரி மற்றும் சேத்தியாத்தோப்பு உள்ளிட்ட அனைத்து தனியார் பள்ளிகளிலும் சிறப்பு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதில் 10ம் வகுப்பு மாணவர்கள் மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை முதல் மாலை 6 மணி வரை சிறப்பு வகுப்புகள் நடைபெற்று வருகிறது.