பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் சிறப்பு ரயில்கள் இயக்கம் – ரயில்வே அறிவிப்பு!

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் சிறப்பு ரயில்கள் இயக்கம் – ரயில்வே அறிவித்துள்ளது. ஜன.12-ல் தாம்பரத்தில் இரவு 9 மணிக்கு புறப்படும் சிறப்புக் கட்டண ரயில், மறுநாள் காலை 9 மணிக்கு நெல்லை சென்றடையும். ஜன.13-ல் நெல்லையில் பகல் 1 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் அதிகாலை 3.20-க்கு எழும்பூர் சென்றடையும். ஜன.16-ல் தாம்பரத்தில் இரவு 10.30-க்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 9 மணிக்கு நெல்லை சென்றடையும். ஜன.17-ல் நெல்லையில் இரவு 10.30-க்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 9.20-க்கு தாம்பரம் வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.