புத்தாண்டையொட்டி நாகர்கோவில் – தாம்பரம் இடையே சிறப்பு ரயில்: ஜன.1ல் இயக்கப்படுகிறது

நாகர்கோவில்: தெற்கு ரயில்வே திருவனந்தபுரம் கோட்ட செய்திக்குகுறிப்பு: நாகர்கோவில் சந்திப்பு மற்றும் தாம்பரம் இடையே புத்தாண்டையொட்டி பயணிகளின் வசதிக்காக சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. ரயில் எண்: 06020 நாகர்கோவில் சந்திப்பு – தாம்பரம் அதிவிரைவு சிறப்பு ரயில் நாகர்கோவிலில் இருந்து ஜனவரி 1ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4.25 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.

இந்த ரயிலுக்கு வள்ளியூர், திருநெல்வேலி சந்திப்பு, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர் சந்திப்பு, மதுரை சந்திப்பு, திண்டுக்கல், திருச்சி, விருதாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய நிறுத்தங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. மறு மார்க்கத்தில் ரயில் எண்: 06019 தாம்பரம் – நாகர்கோவில் சந்திப்பு சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில் தாம்பரத்தில் இருந்து ஜனவரி 2ம் தேதி (திங்கள்கிழமை) மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 5.55 மணிக்கு நாகர்கோவில் வந்தடையும்.

இந்த ரயிலுக்கு செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி மற்றும் வள்ளியூர் ஆகிய நிறுத்தங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்த ரயிலுக்கு ஒரு 2-அடுக்கு ஏசி, ஐந்து-3 அடுக்கு ஏசி, பதினொன்று – இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட பெட்டிகள், இரண்டு இரண்டாம் வகுப்பு பொது, இரண்டு – இரண்டாம் வகுப்பு (மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டி) லக்கேஜ் கம் பிரேக் வேன் பெட்டிகள் இடம்பெறும். இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.