இந்தியா- இலங்கை அணிகளுக்கிடையிலான முதலாவது T20 போட்டி எதிர்வரும் மூன்றாம் திகதி இந்தியாவின் மும்பை வான்கடே மைதானத்தில் .நடைபெறவுள்ளது.
இந்த இரு தொடர்களுக்கான இந்திய அணி வீரர்களின் விபரம் நேற்றிரவு அறிவிக்கப்பட்டது.
இதில் T20 போட்டிக்கான இந்திய அணியில் தலைவர் ரோகித் சர்மா, முன்னாள் தலைவர் விராட் கோலி, லோகேஷ் ராகுல் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
சகலத்துறை விளையாட்டு வீரர் ஹர்திக் பாண்ட்யா அணித்தலைவராகவும், அதிரடி பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் துணைதலைவராகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரில் ஆடும் இந்திய அணியை ரோகித் சர்மா வழிநடத்துகிறார். இந்த அணியில் இந்திய அணியின் முன்னணி தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில் வங்காள்தேச அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஷிகர் தவான் சிறப்பாக செயல்படவில்லை.