சமூக மற்றும் அரசியல் ரீதியாகவும் மிகவும் சவாலான காலக்கட்டத்தில் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை மக்களுக்கு தெரிவிப்பதிலும், கடமைகளை வினைத்திறனுடன் நிறைவேற்றுவதும் அரச ஊழியர்களின் முதன்மையான கடமையாக இருக்க வேண்டும் என அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் திரு.தினித் சிந்தக கருணாரத்ன இன்று (02) தெரிவித்தார்.
இந்த இக்கட்டான காலக்கட்டத்தில் தாய்நாடு கோரும் கடமையையும் பொறுப்பையும் நிறைவேற்றுவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேணடும என்றும் பணிப்பாளர் நாயகம் மேலும் சுட்டிக்காட்டினார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஊழியர்கள் 2023 ஆம் ஆண்டு புத்தாண்டில் தமது கடமைகளை ஆரம்பித்தனர். இன்றைய தினம் திணைக்களத்தில் வளாகத்தில் இது தொடர்பான நிகழ்வு இடம்பெற்றது. அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் தினித் சிந்தக கருணாரத்னவின் தலைமையில் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் இன்று கூடினர். இதன்போது பணிப்பாளர் நாயகத்தினால் தேசிய கொடி ஏற்றப்பட்டதுடன், தேசிய கீதமும் இசைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஊழியர்கள் அரச சேவை தொடர்பான உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.
புத்தாண்டில் சவால்களை வெற்றி கொள்வதற்கும் புரிந்துணர்வுடன் செயல்திறன்மிக்கதாக பணியாற்றக் கூடிய புத்தாண்டாக அமைய வேண்டும் என்று ஊழியர்களுக்கு நல்வாழ்த்தும் தெரிவித்தார்.
கருத்து வேறுபாடுகள் இருந்த போதும் இதுவரையில் ,அரச தகவல் திணைக்களம் என்ற ரீதியில் அதன் செயற்பாடுகளுக்கு எந்தவித இடையூறும் இன்றி அரசாங்கத்தின் அபிலாசைகளுக்கு அமைவாக செயற்பட்ட அனைத்து ஊழியர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டார்.
அரசின் தலைமைத்துவத்திற்கும் அரசாங்கத்திற்கும் மிகவும் அதிதியாவசிய நிறுவகமாக அரச தகவல் திணைக்களத்தை மேம்படுத்துவதற்கு தற்போது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த வருடத்தில் மகிழ்ச்சியுடன், ஒரு தாய் மக்கள் போன்று ஒன்றிணைந்து பணியாற்றக் கூடிய ஆற்றல் புதிய ஆண்டில் கிட்ட வேண்டும் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் அரசாங்க தகவல் திணைக்களத்தின் சகல ஊழியர்களும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.