க. பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்காக பாடசாலைகளில் உயர் தர வகுப்புகள் ஆரம்பம் – கல்வி அமைச்சு

இம்முறை க. பொ.த (சாதாரண தரப்) பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்காகப் பாடசாலைகளில் கல்விப் பொதுத் தராதரப் பத்திர (உயர் தர) வகுப்புகள் ஜூன் மாதம் நான்காம் திகதியிலிருந்து ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான சுற்றுநிருபம் தற்போது கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.

அச்சுற்றுநிருபம் சகல கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதுவரை இச் சுற்று நிருபம் கிடைக்கப் பெறாத அதிபர்கள் இது தொடர்பாக மாகாண மற்றும் வலயக் கல்வி அலுவலகங்களைத் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம்.

அத்துடன் பாடசாலை மாணவர்களுக்கான மேலதிக தகவல்களை சம்பந்தப்பட்ட பாடசாலை அதிபர்களிடம் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.