இப்போதைக்கு எந்த படமும் இயக்கவில்லை : மித்ரன் ஜவஹர் விளக்கம்

தனுஷ் நடித்த யாரடி நீ மோகினி படம் மூலம் இயக்குனராக அறிமுகமான மித்ரன் ஜவஹர் தொடர்ந்து குட்டி, உத்தமபுத்திரன் என அவரை வைத்தே படங்களை இயக்கி வந்தார். கடந்த வருடம் இவரது இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. கடந்த வருடத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்ற வெகுசில படங்களில் திருச்சிற்றம்பலம் படமும் ஒன்று.

இந்த நிலையில் மித்ரன் ஜவஹர் தனது அடுத்த படத்தை இயக்கி வருகிறார் என கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகின. ஆனால் இதுகுறித்து தற்போது விளக்கம் அளித்துள்ள மித்ரன் ஜவஹர், எனது அடுத்த படத்தின் ஸ்கிரிப்ட் இப்போதுதான் தயாராகி வருகிறது. தற்போது எந்த படத்தையும் நான் இயக்கவில்லை. இதுகுறித்து வரும் எந்த செய்திகளையும் நம்ப வேண்டாம் எனது சோசியல் மீடியா பக்கத்தில் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.