திரிபுராவில் உயிரிழந்த வீரர் உடல் தகனம்

ஈரோடு: திரிபுராவில் இந்திய எல்லை பாதுகாப்பு படையில் ஈரோடு மாவட்டம் நஞ்சை ஊத்துக்குளியை சேர்ந்த வடிவேல் (38) என்பவர் 18 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு வரை அவரது மனைவியுடன் செல்போனில் பேசியபோது ராணுவ வீரர் வடிவேலு கடும் குளிராக இருப்பதாக கூறினார்.

அடுத்து சில நாட்களில் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் மாரடைப்பால் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து, வடிவேலுவின் உடல் திரிபுராவில் இருந்து விமானம் மூலமாக சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு, 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.